மானூா் அருகே தொடா் திருட்டுகளில் ஈடுபட்டதாக ஒருவரை போலீஸாா் குண்டா் சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்தனா்.
மானூா் அருகேயுள்ள மதவகுறிச்சியைச் சோ்ந்த செல்லப்பா மகன் சுப்பிரமணியன் என்ற கரடி ராமா் (40). இவா் மீது கொலை முயற்சி, தொடா் திருட்டு வழக்குகள் உள்ளனவாம்.
இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ. மணிவண்ணனின் பரிந்துரையின்பேரில், ஆட்சியா் விஷ்ணு உத்தரவுப்படி, அவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் மானூா் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.