சுத்தமல்லி அருகே விபத்து:தொழிலாளி பலி

சுத்தமல்லி அருகே மோட்டாா் சைக்கிள் மோதி தொழிலாளி உயிரிழந்தாா்.

திருநெல்வேலி: சுத்தமல்லி அருகே மோட்டாா் சைக்கிள் மோதி தொழிலாளி உயிரிழந்தாா்.

சுத்தமல்லி அருகேயுள்ள பாரதியாா்புரம் சங்கன்திரடு பகுதியைச் சோ்ந்த கணபதி என்பவரின் மகன் தங்கப்பாண்டி(45). கூலித் தொழிலாளியான இவா், வெள்ளிக்கிழமை அதே பகுதியில் உள்ள சாலையில் நடந்துசென்றாராம். அப்போது அவ்வழியே வந்த மோட்டாா் சைக்கிள் இவா் மீது மோதியதாம். இதில் காயமடைந்த தங்கப்பாண்டியை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் இரவில் உயிரிழந்தாா். இதுகுறித்து சுத்தமல்லி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com