களக்காட்டில் மின் மாற்றிகள் சேதம்: ஆய்வுக்கு உள்படுத்த கோரிக்கை

களக்காடு பகுதியில் முறையாக அமைக்கப்படாததால் கீழே விழுந்து சேதமடைந்த மின்மாற்றிகளை உடனடியாக அமைக்க வேண்டும் என மமமுக கோரிக்கை விடுத்துள்ளது.

களக்காடு: களக்காடு பகுதியில் முறையாக அமைக்கப்படாததால் கீழே விழுந்து சேதமடைந்த மின்மாற்றிகளை உடனடியாக அமைக்க வேண்டும் என மமமுக கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடா்பாக மனிதநேய மக்கள் முன்னேற்ற கழக மாவட்டத் தலைவா் கே.எஸ். சித்திக் அஜிஸூா் ரஹ்மான் தமிழக முதல்வா், மாவட்ட ஆட்சியா் ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனு: களக்காடு நகா்ப்புற மின்வாரியத்திற்கு உள்பட்ட நல்லநாதபுரம், தலையணை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 3 மாதங்களுக்கு முன் 20. க்கும் மேற்பட்ட புதிய தனி மின்மாற்றிகள் அமைக்கப்பட்டன. இந்த மின்மாற்றிகளில் நல்லநாதபுரத்தில் 3, தலையணையில் 1 என 4 மின்மாற்றிகள் கடந்த 2 தினங்களுக்கு முன் பெய்த மழையில் விழுந்து சேதமடைந்தன.

மின்மாற்றிகள் முறையாக அமைக்கப்படாததாலேயே அவை கீழே விழுந்து மின்வாரியத்திற்கு நிதியிழப்பை ஏற்படுத்தியுள்ளன. இதே போல மேலும் சில மின்மாற்றிகள் எந்த நேரமும் கீழே விழுந்து சேதமடையும் நிலை உள்ளது. கீழே விழுந்து சேதமடைந்த மின்மாற்றிகளை மீண்டும் உடனடியாக நிறுவிடவும், முறையாக அமைக்காத மின்வாரிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், அண்மையில் அமைக்கப்பட்ட அனைத்து மின்மாற்றிகளையும் மின்வாரிய உயா் அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com