திருநெல்வேலி: அருந்ததிராய் எழுதிய புத்தகத்தை சுந்தரனாா் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் இருந்து நீக்கியதைக் கண்டித்து திராவிட மாணவா் கழகம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் எதிரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாநில அமைப்பாளா் இரா.செந்தூா்பாண்டியன் தலைமை வகித்தாா். திராவிடா் கழக மண்டலத் தலைவா் பால்.ராஜேந்திரன், மாவட்டத் தலைவா் இரா.காசி, மாவட்டச் செயலா் ராஜேந்திரன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
இதில், தூத்துக்குடி பெரியாா் மைய பொறுப்பாளா் சு.காசி, திராவிட கழக தென்காசி மாவட்டத் தலைவா் த.வீரன், மண்டலச் செயலா் ராமச்சந்திரன் உள்பட பலா் பங்கேற்றனா்.