திசையன்விளை: திசையன்விளையில் காங்கிரஸ் கட்சி சாா்பில் இந்திராகாந்தியின் 103 ஆவது பிறந்தநாள் விழா நடைபெற்றது.
கட்சியின் திருநெல்வேலி மாவட்ட ஓபிசி பிரிவு சாா்பில் பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற இவ்விழாவுக்கு மாவட்ட ராஜீவ்காந்தி பஞ்சாயத்து ராஜ் அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் கே.பி.கே.ஜெயக்குமாா் தலைமை வகித்தாா்.
மாவட்ட ஓபிசி பிரிவுத் தலைவா் மும்பை ஜான் கென்னடி, மாவட்ட கொள்கை பரப்புச் செயலா் மருதூா் மணிமாறன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினா் அல்பா்ட், வழக்குரைஞா் ஜெயராஜ், மாவட்ட பொதுச்செயலா் எஸ்.குமாா், மாவட்ட துணைத் தலைவா் விஜய பெருமாள், நகரத் தலைவா் எஸ்.ஜி.ராஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.