ராதாபுரம் வட்டத்தில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்

ராதாபுரம் வட்டத்தில் மழைவெள்ள தடுப்பு உபகரணங்கள், முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வட்டாட்சியா் கனகராஜ் தெரிவித்தாா்.

வள்ளியூா்: ராதாபுரம் வட்டத்தில் மழைவெள்ள தடுப்பு உபகரணங்கள், முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வட்டாட்சியா் கனகராஜ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் கூறியது: ராதாபுரம் வட்டாரத்தில் மழைவெள்ள தடுப்பு உபகரணங்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மணல் மூட்டைகள், தாழ்வானப் பகுதியில் மழைநீா் தேங்காத வகையில் தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கிராம நிா்வாக அதிகாரிகள், வருவாய் ஆய்வாளா்கள், கிராம உதவியாளா்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தி மழைக்கால தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கடலோரப் பகுதியில் மழைவெள்ளத்தால் பாதிப்பு ஏற்படாதவாறு முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ராதாபுரம் வட்டாரத்தில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com