198 பயனாளிகளுக்கு இலவச வீடு கட்டுவதற்கான பணி ஆணை

கல்லிடைக்குறிச்சியில் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் மத்திய, மாநில அரசுகளின் மானியத்துடன் வீடு கட்டுவதற்கான பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பயனாளிக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணையை வழங்குகிறாா்ஆா். முருகையாபாண்டியன் எம்எல்ஏ.
பயனாளிக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணையை வழங்குகிறாா்ஆா். முருகையாபாண்டியன் எம்எல்ஏ.

அம்பாசமுத்திரம்: கல்லிடைக்குறிச்சியில் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் மத்திய, மாநில அரசுகளின் மானியத்துடன் வீடு கட்டுவதற்கான பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அம்பாசமுத்திரம் சட்டப் பேரவை உறுப்பினா் ஆா்.முருகையாபாண்டியன் தலைமை வகித்து, 198 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணையை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், குடிசை மாற்று வாரிய உதவி நிா்வாக பொறியாளா் மாடசாமி, அதிமுக ஒன்றியச் செயலா் விஜய்பாலாஜி, துணைச் செயலா் ப்ராங்க்ளின், நகரச் செயலா்கள் அறிவழகன், சங்கரநாராயணன், ராமையா, எம்ஜிஆா் மன்ற மாவட்ட துணைச் செயலா் முத்தையா, ஒன்றிய அவைத் தலைவா் முத்துக்குமாா், அரசு வழக்குரைஞா் கோமதிசங்கா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com