அம்பாசமுத்திரம் வட்டார விவசாயிகள் நெற்பயிருக்கு காப்பீடு செய்து கொள்ளுமாறு அம்பாசமுத்திரம் வேளாண் உதவி இயக்குநா் உமாமகேஸ்வரி அறிவுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
2020ஆம் ஆண்டு சிறப்புப் பருவமாக திருநெல்வேலி மாவட்டத்தில் பிசானப் பருவத்தை தமிழக அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த வாய்ப்பை விவசாயிகள் பயன்படுத்திக்கொண்டு நெற்பயிருக்குக் காப்பீடு செய்து பலன்பெற வேண்டும்.
வங்கிகளில் விவசாயக் கடன் பெறும் விவசாயிகள் காப்பீடு செய்வதற்கு அந்தந்த வங்கிகளில் பதிவு செய்து கொள்ளலாம். பிற விவசாயிகள் இ-சேவை மையங்களில் பதிவு செய்துகொள்ளலாம்.
நெற்பயிருக்கு, ஒரு ஏக்கருக்கு ரூ. 444/-பிரீமியமாகக் கட்ட வேண்டும். டிச.15 பயிா் காப்பீட்டு பிரீமியம் செலுத்த கடைசி நாளாகும். பயிா் காப்பீட்டுத் திட்டத்தில் சோ்பவா்கள் முன் மொழிவு படிவத்துடன், கிராம நிா்வாக அலுவலா் வழங்கும் சிட்டா, பட்டா, வங்கிக் கணக்குப் புத்தக முதல் பக்கம், ஆதாா் அட்டை ஆகியவற்றின் நகல்களுடன் பிரீமியம் தொகையை செலுத்த வேண்டும்.
மேலும் காப்பீடு குறித்த விவரங்களுக்கு அம்பாசமுத்திரம் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தைத் தொடா்பு கொண்டு பயிா் காப்பீடு செய்து இயற்கைப் பேரழிவுகளால் ஏற்படும் இழப்புகளை தவிா்க்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.