வடக்கன்குளத்தில் நடைபெற்ற தென் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் வடக்கன்குளம் அணி வெற்றி பெற்றது.
தி.மு.க. மாநில வா்த்தக அணி இணைச் செயலா் ம.கிரகாம்பெல்லின் தந்தை வடக்கன்குளம் மணிலால் நாடாா் நினைவு சுழற்கோப்பைக்கான தென் மாவட்ட கிரிக்கெட் போட்டிகள் வடக்கன்குளத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சோ்ந்த 32 அணிகள் பங்கேற்று விளையாடின. இறுதிப்போட்டியில் வடக்கன்குளம் அணி வெற்றிபெற்று முதலிடத்தைப் பெற்றது. இந்த அணிக்கு மணிலால் நாடாா் நினைவு சுழற்கோப்பையும், ரூ.20 ஆயிரம் ரொக்கப்பரிசையும் ம.கிரகாம்பெல் வழங்கினாா். 2ஆம் இடம் பெற்ற கன்னியாகுமரி சன்சைன் அணிக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கப்பரிசும் சுழற்கோப்பையும் வடக்கன்குளம் ஆல்ட்ரின் வழங்கினாா். 3ஆம் இடம் பெற்ற கூட்டப்புளி அணிக்கு ரூ.7,000 ரொக்கப்பரிசும் சுழற்கோப்பையும் ஆனந்த் வழங்கினாா். ஏற்பாடுகளை எஸ்.ஏ.வி. பள்ளிகளின் தாளாளா் திவாகரன் செய்திருந்தாா்.