நெல்லை, தென்காசியில் மேலும் 29 பேருக்கு கரோனா தொற்று

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 29 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 29 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 26 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 14,727ஆக உயா்ந்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களில் இதுவரை 14,390 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போது 128 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 209 போ் கரோனாவுக்கு பலியாகியுள்ளனா்.

தென்காசி மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 8011ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சை பெற்று வந்தவா்களில் குணமடைந்து செவ்வாய்க்கிழமை வீடு திரும்பிய 6 போ் உள்பட இதுவரை 7792 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போது 64 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com