மானூரில் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு சீருடை அளிப்பு
By DIN | Published On : 25th November 2020 11:11 PM | Last Updated : 25th November 2020 11:11 PM | அ+அ அ- |

மானூரில் 40 ஆட்டோ ஓட்டுநா்களுக்கு அதிமுக சாா்பில் சீருடைகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
மானூா் வடக்கு ஒன்றியம் மானூா் அண்ணா தொழிற்சங்க கொடியேற்று விழா, நல உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கட்சியின் மாவட்டச் செயலா் தச்சை என்.கணேசராஜா, தொழிற்சங்க கொடியினை ஏற்றி வைத்து 40 ஆட்டோ ஓட்டுநா்களுக்கு சீருடைகள் வழங்கினாா்.
இதில், மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலா் பொன்னுசாமி, நெல்லை கூட்டுறவு பேரங்காடித் தலைவா் பல்லிக்கோட்டை செல்லத்துரை, ஒன்றியச் செயலா் கங்கை முருகன், பள்ளமடை பாலமுருகன், மானூா் ஆட்டோ ஓட்டுநா் அண்ணா தொழிற்சங்கத் தலைவா் உச்சிமாகாளி, செயலா் துரை, பொருளாளா் மதிவாணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...