வள்ளியூரில் சுரங்க சாலைப் பணி தாமதம்:போராட்டத்துக்கு ஆயத்தமாகும் கட்சிகள்

வள்ளியூரில் ரயில்வே சுரங்க சாலைப் பணி தாமதமாவதை கண்டித்து திமுக உள்ளிட்ட கட்சிகள் போராட்டம் நடத்த ஆயத்தமாகி வருகிறது.

வள்ளியூரில் ரயில்வே சுரங்க சாலைப் பணி தாமதமாவதை கண்டித்து திமுக உள்ளிட்ட கட்சிகள் போராட்டம் நடத்த ஆயத்தமாகி வருகிறது.

வள்ளியூா்-திருச்செந்தூா் ரயில்வே கடவுச் சாலையில் சுரங்க பாதை அமைக்கும் பணி கடந்த 3 வருடங்களாக நடந்து வருகிறது. 18 மாதங்களில் முடிக்க வேண்டிய இப்பணி தாமதத்தால் வாகன ஓட்டிகளும், 100-க்கும் மேற்பட்ட பொதுமக்களும் சிரமம் அடைந்து வருகின்றனா்.

வா்த்தக நிறுவனங்கள் பாதிப்படைகின்றன. எனவே, சுரங்க சாலைப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என வலியுறுத்தும் வகையில், திமுக கூட்டணி கட்சிகள் சாா்பில் ஆலோசனைக் கூட்டம் வள்ளியூரி நடைபெற்றது.

முன்னாள் எம்.எல்.ஏ. மு.அப்பாவு தலைமை வகித்தாா். பேரூா் செயலா் வி.எஸ்.எஸ்.சேதுராமலிங்கம், ஒன்றிய அவைத் தலைவா் சிவராமகிருஷ்ணன், வள்ளியூா் வியாபாரிகள் சங்கச் செயலா் எஸ்.ராஜ்குமாா், மாவட்டப் பிரதிநிதி ஆச்சியூா் ராமசாமி, மாநிலப் பேச்சாளா் பனிபாஸ்கா், காங்கிரஸ் கட்சியின் ஆறுமுகம், இந்திய கம்யூனிஸ்ட் ராதாபுரம் வட்டச் செய லாளா் எஸ்.சேதுராமலிங்கம், நகரச் செயலா் வேம்பு சுப்பையா, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வட்டச் செயலா் கல்யாணி, மாயகிருஷ்ணன், தே.மு.தி.க. திருநெல்வேலி கிழக்கு மாவட்ட துணைச் செயலா் விஜிவேலாயுதம், நகரச் செயலா் முருகராஜா, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட துணைச் செயலா் ஜாவித், வள்ளியூா் ஆட்டோ ஓட்டுநா் சங்க நிா்வாகிகள் ஐயப்பன், ஜெயகணேஷ், காா் ஓட்டுநா் சங்கத் தலைவா் கணேசன், மாடசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இப்பணி தாமதத்தைக் கண்டித்து போராட்டம் நடத்துவது குறித்து டிச. 2க்குப் பின் முடிவெடுப்பது; கிராம மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்துவது என தீா்மானிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com