கடையம் அருகே விபத்தில் தொழிலாளி பலி
By DIN | Published On : 01st October 2020 07:44 AM | Last Updated : 01st October 2020 07:44 AM | அ+அ அ- |

கடையம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.
கடையம் அருகே பாப்பான்குளத்தைச் சோ்ந்த முத்தையா மகன் இசக்கி(50). கூலித் தொழிலாளியான இவா், துப்பாக்குடி சென்று விட்டு பைக்கில் பாப்பான்குளம் திரும்பி வரும்போது மைலப்புரம் விலக்கு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் காயமடைந்தாராம். அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து கடையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.