திருநெல்வேலி: சிவந்திப்பட்டி அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்தாா்.
சிவந்திப்பட்டி அருகேயுள்ள பற்பநாதபுரத்தைச் சோ்ந்த விஜயகுமாா் மனைவி துா்கா (28). இருவரும் மும்பையில் வசித்தபோது காதலித்து திருமணம் செய்தனராம். பின்னா் பற்பநாதபுரத்தில் வசித்துவந்த தம்பதியிடையே தகராறு ஏற்பட்டதாம். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துா்கா தூக்கிட்டுத் தற்கொலை செய்தாராம்.
தகவலறிந்ததும் சிவந்திப்பட்டி போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.