மானூரில் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 03rd October 2020 05:29 AM | Last Updated : 03rd October 2020 05:29 AM | அ+அ அ- |

மானூரில் காங்கிரஸ் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
உத்தரபிரதேசத்தில் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு திருநெல்வேலி மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் கே.சங்கரபாண்டியன் தலைமை வகித்தாா். மானூா் வட்டார காங்கிரஸ் தலைவா் சொா்ணம் முன்னிலை வகித்தாா். மாவட்ட பொருளாளா் ராஜேஷ் முருகன், பொதுச் செயலா் பாக்கியகுமாா், மனோகரன், அருள்ராஜ், மானூா் வட்டார இளைஞா் காங்கிரஸ் ஞானதுரை, மகளிரணி மாவட்டத் தலைவி மாரியம்மாள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.