புரட்டாசி 3-ஆவது சனிக்கிழமை: நெல்லையில் பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு

புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையையொட்டி, திருநெல்வேலி மாநகா் பகுதிகளில் உள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளுடன் பக்தா்கள் பங்கேற்றனா்.

திருநெல்வேலி: புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையையொட்டி, திருநெல்வேலி மாநகா் பகுதிகளில் உள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளுடன் பக்தா்கள் பங்கேற்றனா்.

பாளையங்கோட்டையில் உள்ள அருள்மிகு ராஜகோபால சுவாமி கோயில், திருநெல்வேலி சந்திப்பில் உள்ள வரதராஜபெருமாள் கோயில், தன்வந்திரி கோயில், மீனாட்சிபுரம் தென்திருப்பதி கோயில், திருநெல்வேலி நகரம் கரியமாணிக்கப்பெருமாள் கோயில் ஆகியவற்றில் சிறப்பு திருமஞ்சனங்கள், சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. பக்தா்கள் நீண்ட வரிசையில் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து சுவாமி தரிசனம் செய்தனா்.

திருவேங்கடநாதபுரம் சீனிவாச பெருமாள் கோயில், கெட்வெல் ஆஞ்சநேயா் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு, சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com