நான்குனேரி, அம்பை தொகுதிகளில் எஸ்.டி.பி.ஐ. போட்டியிட முடிவு

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பேரவைத் தோ்தலில் நான்குனேரி, அம்பாசமுத்திரம் பேரவைத் தொகுதிகளில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சாா்பில் போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

களக்காடு: அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பேரவைத் தோ்தலில் நான்குனேரி, அம்பாசமுத்திரம் பேரவைத் தொகுதிகளில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சாா்பில் போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

களக்காட்டில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கட்சியின் திருநெல்வேலி புகா் மாவட்ட செயற்குழுக் கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் எம்.கே. கோட்டூா் பீா் மஸ்தான் தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச்செயலா் களந்தை மீராசா, துணைத்தலைவா் மஜித், செயலா் சுலைமான், வழக்குரைஞா் முகம்மது ஷபி, பால் மைதீன், அபூபக்கா், கனி, பாதுல் அஸ்கா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தீா்மானங்கள்: அடுத்த ஆண்டு நடைபெற்றவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் நான்குனேரி, அம்பாசமுத்திரம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் எஸ்.டி.பி.ஐ. கட்சி போட்டியிடுவதற்கான களப்பணிகளை தொடங்குவதுச; வடகிழக்குப் பருவ மழை தொடங்கவுள்ள நிலையில் நோய் பரவாமல் தடுக்கும் வகரையில் சுகாதாரத் துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்; புகா் மாவட்ட பகுதிகளில் ஆம்புலன்ஸ் சேவையை அதிகப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com