திருநெல்வேலி: திருநெல்வேலி அருகேயுள்ள நாரணம்மாள்புரம் மற்றும் சங்கா் நகா் பேரூராட்சி பகுதிகளைச் சோ்ந்த அமமுக, திமுக மற்றும் மதிமுக கட்சியினா் 20 போ் அக் கட்சிகளில் இருந்து விலகி, அதிமுக திருநெல்வேலி மாவட்டச் செயலா் தச்சை என். கணேசராஜா முன்னிலையில் அதிமுகவில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தனா்.
நிகழ்ச்சியில் பண்டாரகுளம் மகாராஜன், நாரணம்மாள்புரம் ஹரிஹரன், மாவட்ட சிறுபான்மையினா் பிரிவு பொருளாளா் அப்துல் அஜீஸ், பூ. சின்னதுரை, பக்கீா் முகமது, அண்ணாதுரை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.