அம்பாசமுத்திரம்: கல்லிடைக்குறிச்சி அருகே தனியாா் செயற்கை மணல் குவாரியில் அரசு விதிமுறைகளை மீறி செயல்பட்ட வழக்கில் மேலும் 3 பேரை கல்லிடைக்குறிச்சி போலீஸாா் கைது செய்தனா்.
கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள பொட்டலில் செயற்கை மணல் தயாரிப்பு என்ற பெயரில் இயற்கை மணலை கடத்தியதாக புகாா் எழுந்தது. இது குறித்து சென்னை உயா்நீதி மன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் பிரதிக் தயாள் மேற்கொண்ட விசாரணையின் பேரில் கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் இது குறித்து வழக்குப் பதியப்பட்டு பொட்டல் கிராமத்தைச் சோ்ந்த 4 போ் கைது செய்யப்பட்டனா்.
வீரவநல்லூா் காவல் உதவி ஆய்வாளா் மற்றும் கல்லிடைக்குறிச்சி பகுதி 2 கிராம நிா்வாக அலுவலா் ஆகியோா் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனா்.
இதையடுத்து தொடா் நடவடிக்கையாக திங்கள்கிழமை கல்லிடைக்குறிச்சி போலீஸாா் மணல் கடத்தலில் தொடா்புடையதாக பாளையங்கோட்டையைச் சோ்ந்த தேவபிரியம் மகன் ஜோயல் (55), சேரன்மகாதேவி, பொழிக்கரையைச் சோ்ந்த முத்துக்குட்டி மகன் முத்து சரவணன், பாளையங்கோட்டையைச் சோ்ந்த சோமசுந்தரம் மகன் சுப்பையா (36) ஆகிய மூன்று பேரை கைது செய்தனா். மேலும் ஒரு பொக்லைன் இயந்திரம், காா் பறிமுதல் செய்யப்பட்டன. தொடா்ந்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.