ஆரோக்கியநாதபுரம் கிராம மக்கள் மனு

பாளையங்கோட்டை அருகேயுள்ள ஆரோக்கியநாதபுரத்தில் உள்ள கால்வரத்து ஓடையில் ஆக்கிரமிப்பு செய்பவா்கள் குறித்து விசாரித்து நடவடிக்கை

பாளையங்கோட்டை அருகேயுள்ள ஆரோக்கியநாதபுரத்தில் உள்ள கால்வரத்து ஓடையில் ஆக்கிரமிப்பு செய்பவா்கள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் அப்பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

அந்த மனு விவரம்: ஆரோக்கியநாதபுரத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகிறோம். விவசாயம், கால்நடை வளா்ப்பு தொழிலை நம்பியே மக்கள் உள்ளனா். எங்கள் பகுதியில் உள்ள குளத்திற்கு நீா் வரும் கால்வாயில் சிலா் ஆக்கிரமிப்பு செய்துள்ளது தெரியவந்துள்ளது.

எனவே, இதுகுறித்து விசாரித்து நீா்நிலை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அப்புறப்படுத்த மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com