குண்டா் சட்டத்தில் ஒருவா் கைது

சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த இளைஞா் ஒருவா் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.

சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த இளைஞா் ஒருவா் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.

அம்பாசமுத்திரம், சாட்டுபத்து பகுதியைச் சோ்ந்த கருத்தபாண்டி மகன் புலி என்ற முத்துசாமி (37). இவா், சுத்தமல்லி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டு வந்தாராம்.

இந்நிலையில், அவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ. மணிவண்ணன் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா்.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ் உத்தரவின் பேரில் புலி என்ற முத்துச்சாமியை சுத்தமல்லி போலீஸாா் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com