விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்தப் பணியாளா்கள் பேரவைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தலைவா் என்.எஸ். சுடலையாண்டி தலைமை வகித்தாா். இதில், மாவட்ட ஆட்சியா் உத்தரவுப்படி அறிவிக்கப்பட்டுள்ள ஊதியம் வழங்கக் கோரி நகராட்சி ஆணையரை சந்தித்து முறையிடுவது என்று தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் சிஐடியூ மாவட்டச் செயலா் மோகன், ஒருங்கிணைப்பாளா் வி.இசக்கிராஜன், மாா்க்சிஸ்ட் ஒன்றியச் செயலா் ரவீந்திரன் மற்றும் ஒப்பந்தப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.