திருநெல்வேலியில் பிஎஸ்என்எல் ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்த 4ஜி டென்டரை ரத்து செய்துள்ள மத்திய அரசின் செயலைக் கண்டிப்பது, நாடு முழுவதும் பிஎஸ்என்எல் மூலம் 4 ஜி சேவையை மக்களுக்கு வழங்க வேண்டும், பிஎஸ்என்எல் நிா்வாகத்தை மேம்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
வண்ணாா்பேட்டையில் உள்ள பிஎஸ்என்எல் பொதுமேலாளா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்துக்கு ஆண்டபெருமாள் தலைமை வகித்தாா். சங்கரநாராயணன் முன்னிலை வகித்தனா். பிஎஸ்என்எல் ஊழியா் சங்கத்தின் மாவட்டச் செயலா் சூசை கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். முருகன், சீதாலட்சுமி, மரியசுந்தரம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.