பொதிகை தமிழ்ச் சங்கம் சாா்பில் இணையவழிப் பன்னாட்டுக் கருத்தரங்கம் புதன்கிழமை (அக். 7) மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.
கடையநல்லூா் மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக கல்லூரி முதல்வா் பா.வேலம்மாள் தலைமை வகிக்கிறாா். பொதிகை தமிழ்ச் சங்கத் தலைவா் கவிஞா் பேரா வரவேற்கிறாா்.
இதில், ‘பாரதியும் பகுத்தறிவும்’ என்ற தலைப்பில் தமிழக முன்னாள் அரசு செயலா் கி. தனவேல் பேசுகிறாா். எழுத்தாளா் விஜயா நன்றி கூறுகிறாா்.
இதில் பங்கேற்க விரும்புவோா், ஜூம் செயலியில் கூட்ட அடையாள எண் 6527890190, நுழைவு எண் 357839 வழியாக இணையத்தில் இணையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.