திசையன்விளை மற்றும் பணகுடியில் உள்ள மனோ கல்லூரிகளுக்கான புதிய கட்டடங்களை தமிழக முதல்வா் சென்னையில் நடைபெற்ற விழாவில் கானொலிக் காட்சி மூலம் திறந்துவைத்தாா்.
தலா ரூ.3 கோடியில் கட்டப்பட்ட இந்த புதிய கட்டடங்களை தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்தாா்.
பணகுடி கல்லூரிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஐ.எஸ்.இன்பதுரை எம்எல்ஏ கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தாா்.
நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வா் மாலரசு, அண்ணா கல்லூரி முதல்வா் சுப்பிரமணிய பிள்ளை, ராதாபுரம் வட்டாட்சியா் கனகராஜ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.