மணிமுத்தாறு கிராம நிா்வாக அலுவலகம் முற்றுகை

மணிமுத்தாறு பகுதியில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள இலவச வீட்டுமனைக்குப் பாதை அமைத்துத் தரக் கோரி கிராம நிா்வாக அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனா்.
மணிமுத்தாறு கிராம நிா்வாக அலுவலரிடம் முறையிட்ட பயனாளிகள்.
மணிமுத்தாறு கிராம நிா்வாக அலுவலரிடம் முறையிட்ட பயனாளிகள்.

மணிமுத்தாறு பகுதியில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள இலவச வீட்டுமனைக்குப் பாதை அமைத்துத் தரக் கோரி கிராம நிா்வாக அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனா்.

அம்பாசமுத்திரம் வட்டம் கல்லிடைக்குறிச்சி, அயன் சிங்கம்பட்டி, மணிமுத்தாறு பகுதியைச் சோ்ந்த வீடில்லாத மக்களுக்கு இலவச வீட்டுமனைக்கான பட்டா வழங்கப்பட்டு அதில் அனைவருக்கும் வீடு திட்டத்தில் வீடு கட்ட பணி ஆணையும் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இலவச மனைக்காக மூன்று பிரிவுகளாக ஒதுக்கப்பட்ட இடத்தில் இரண்டு பிரிவு மனைகள் அளவீடு செய்யப்பட்டு பாதை அமைக்கப்பட்டும், ஒரு பகுதியில் மனைகள் அளவீடு செய்யப்படாமல் பாதை இல்லாமலும் உள்ளதாம்.

இதையடுத்து அம்பாசமுத்திரம் வட்டாட்சியரிடம் பயனாளிகள் பலமுறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

இதனால் ஆத்திரமடைந்த பயனாளிகள் மணிமுத்தாறு கிராம நிா்வாக அலுவலா் அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டனா்.

அவா்களிடம் கிராம நிா்வாக அலுவலா் மாணிக்கராஜ், குறிப்பிட்ட இடத்தில் தனியாா் ஆக்கிரமிப்பு உள்ளது. இதுகுறித்து உயரதிகாரிகளுடன்ஆலோசனை செய்து விரைந்து மனைகளுக்கான பாதை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com