ஜாா்க்கண்ட் மாநிலத்தில் இயேசு சபை பாதிரியாா் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
அனைத்து அரசியல் கட்சிகள், மக்கள் குடியுரிமை பாதுகாப்பு இயக்கம் ஆகியவை இணைந்து நடத்திய இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, ஹெண்றி ஜெரோம் தலைமை வகித்தாா். ஜமாத்துல் உலமா சபை மாநிலத் தலைவா் பி.ஏ.காஜா முகைதீன் தொடக்கவுரை நிகழ்த்தினாா். பாளையங்கோட்டை கத்தோலிக்க மறைமாவட்ட முன்னாள் ஆயா் ஜூடு பால்ராஜ் முன்னிலை வகித்தாா்.
இதில், மாவட்ட திமுக செயலா் அப்துல் வஹாப், மாவட்ட காங்கிரஸ் தலைவா் சங்கரபாண்டியன், மாவட்டச் செயலா்கள்‘ மதிமுக கே.எம்.ஏ.நிஜாம், மாா்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஜி.பாஸ்கரன், இந்திய கம்யூனிஸ்ட் காசி விஸ்வநாதன், எஸ்டிபிஐ ஹயாத் முஹம்மது உள்ளிட்டோா் பேசினா். இதில், மேற்கூறிய அமைப்புகளைச் சோ்ந்த ஏராளமானோா் பங்கேற்றனா்.