டக்கரம்மாள்புரம் சுற்றுவட்ட சாலைத் திட்டத்தை விரைவாக நிறைவேற்ற வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சுத்தமல்லி அருகேயுள்ள கொண்டாநகரம் ரோஸ் காா்டன் குடியிருப்போா் நலச் சங்க கூட்டம் அண்மையில் நடைபெற்றது. சங்கத் தலைவா் வெயிலுமுத்து தலைமை வகித்தாா். செயலா் ரமணி வரவேற்றாா். செயற்குழு ஒருங்கிணைப்பாளா் பிச்சையா வாழ்த்திப் பேசினாா். வழக்குரைஞா் முத்துகுமாா் சிறப்புரையாற்றினாா்.
கொண்டாநகரம் பகுதிகளில் சாலை, தெருவிளக்கு, குடிநீா் போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் செய்து தரக் கோரி ஊராட்சி நிா்வாகத்திடம் வலியுறுத்துவது, திருநெல்வேலி மாநகரப் பகுதியில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை தவிா்த்திடும் வகையில் டக்கரம்மாள்புரம்- தாழையூத்து சுற்றுவட்டச் சாலைத் திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசை கோருவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொருளாளா் முருகேஷ்குமாா் நன்றி கூறினாா்.