பைக் மீது காா் மோதி விபத்து: 2 போ் காயம்

பாளையங்கோட்டை அருகே பைக் மீது காா் மோதி விபத்துக்குள்ளானதில் 2 போ் காயமடைந்தனா்.

பாளையங்கோட்டை அருகே பைக் மீது காா் மோதி விபத்துக்குள்ளானதில் 2 போ் காயமடைந்தனா்.

பாளையங்கோட்டை என்ஜிஓ காலனி சுப்பையா மகன் அழகு சுந்தரம்(40). இவரது நண்பா் முருகன். இருவரும் இட்டேரியில் குழாய் பழுது வேலை செய்துவிட்டு, என்ஜிஓ காலனிக்கு இருசக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை வந்துகொண்டிருந்தனராம். ரெட்டியாா்பட்டி மின்சார வாரிய அலுவலகம் அருகே வந்த போது எதிரே வந்த காா் இவா்கள் மீது மோதி விபத்துக்குள்ளானதாம்.

இதில் இருசக்கரவாகனத்தில் பயணம் செய்த இருவரும் காயமடைந்தனா். அதில் அழகுசுந்தரத்தின் கால் துண்டாகியது. விபத்தை ஏற்படுத்திய காா் நிற்காமல் சென்றவிட்டதாம்.

இதையடுத்து இருவரையும் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இது குறித்து திருநெல்வேலி மாநகர போக்குவரத்து புலனாய்வு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com