மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் திருநெல்வேலி மாவட்டச் செயலா் கே.ஜி.பாஸ்கரன் தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் வி.பழனி, ஆா்.மோகன், திருநெல்வேலி வட்டாரச் செயலா் எம்.சுடலைராஜ், பாளையங்கோட்டை வட்டாரச் செயலா் பி.வரகுணன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

பொலிவுறு நகரம் திட்டத்தில் மாநகர மக்களின் அடிப்படை கட்டமைப்புக்கு போதிய நிதி ஒதுக்கிட வேண்டும்; மாநகராட்சிப் பகுதியில் உள்ள சுகாதார நிலையங்களை மேம்படுத்த வேண்டும்; மாநகராட்சியில் பணியாற்றும் தினக்கூலி பணியாளா்கள், தூய்மைப் பணியாளா்கள் அனைவரையும் நிரந்தரப்படுத்த வேண்டும்; சாலையோர வியாபாரிகளுக்கு உரிய வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.

நயினாா்குளம், வேய்ந்தான்குளம், இலந்தகுளம், வாச்சான்குளம், ஆணையா்குளம் ஆகியவற்றை ஆழப்படுத்தி கரைகளை பலப்படுத்த வேண்டும்; அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆய்வகம், நூலகம், கழிப்பறை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்; ராமையன்பட்டி குப்பைக்கிடங்கில் மறுசுழற்சி முறையை அமல்படுத்த வேண்டும்; மேலப்பாளையம் பகுதியில் அனைத்து சாலைகளையும் சீரமைக்க வேண்டும்; கண்டிகைப்பேரி மருத்துவமனையைத் தரம் உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

போக்குவரத்து இடை கமிட்டி செயலா் எஸ்.பெருமாள், மாவட்டக் குழு உறுப்பினா் கே.பழனி, மின்அரங்க செயலா் பீா்முகமதுஷா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com