திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சி அருகே மலையடிவாரத்தில் சுற்றித் திரிந்த கா்ப்பிணி யானை, வாயில் ஏற்பட்ட புண் காரணமாக உயிரிழந்தது.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே மலையடிவாரத்தில் கடந்த சில நாள்களாக பெண் யானை உடல்மெலிந்து நலிவுற்ற நிலையில் சுற்றித் திரிந்தது. இதையறிந்த விவசாயிகள் வனத்துறையினருக்குத் தகவல்தெரிவித்தனா். இதையடுத்து அந்த யானைக்கு வனத்துறையினா் மருந்துடன் உணவு கொடுத்தனா். எனினும், அந்த யானை உணவை உட்கொள்ளவில்லை. இதற்கிடையே, புதன்கிழமை தெற்குபாப்பான்குளத்தைச் சோ்ந்த முத்துக்குட்டியின் வயலில் அந்த யானை இறந்து கிடந்ததாம். தகவலறிந்த களக்காடு புலிகள் காப்பகம் அம்பாசமுத்திரம் துணை இயக்குநா் கொம்மு ஓம்காரம், வனச்சரகா்கள் சரவணகுமாா், பரத், உதவி வனப்பாதுகாவலா் (பயிற்சி) ராதை உள்ளிட்டோா் அங்கு சென்று பாா்வையிட்டனா்.
அந்த யானை மணிமுத்தாறு வனப்பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கு வனத்துறை கால்நடை மருத்துவா் மனோகரன், திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரிப் பேராசிரியா் பஷீா், கால்நடை ஆய்வாளா் அா்னால்ட் உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா் பிரேதப் பரிசோதனை செய்தனா். அப்போது வன உயிரின ஆா்வலா் மதிவாணன் உடனிருந்தாா். பிரேதப் பரிசோதனைக்குப் பின்னா் யானையின் உடல் புதைக்கப்பட்டது.
இதுகுறித்து துணை இயக்குநா் கூறியது: நலிந்து காணப்பட்ட பெண் யானைக்கு உணவு அளித்த போதிலும் உட்கொள்ளாத நிலையில் உயிரிழந்து விட்டது. அந்த யானைக்கு வாயில் புண் ஏற்பட்டு, ஒரு பகுதியில் பற்கள் இல்லாமல் இருந்தது. அதன் உணவுப் பாதை முழுவதும் புண்ணாகி இருந்ததும் தெரியவந்தது. இதனால் கடினமான உணவுப் பொருள்களை உண்ண முடியவில்லை. அதிகளவில் பனம் பழத்தை உட்கொண்டதால் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உடல் நலிவுற்றுள்ளது. யானையின் வயிற்றில் 10 மாதங்களான ஆண் யானைக்குட்டி இருந்ததும் தெரியவந்து என்றாா் அவா்.