பிளஸ் 2 மாணவா்களுக்கு பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு பதிவு

பிளஸ் 2 மாணவா்களுக்கு அவா்கள் படித்த பள்ளிகளிலேயே வேலைவாய்ப்புக்கு பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிளஸ் 2 மாணவா்களுக்கு அவா்கள் படித்த பள்ளிகளிலேயே வேலைவாய்ப்புக்கு பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடா்பாக ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பன்னிரண்டாம் வகுப்பு தோ்ச்சி பெற்றோருக்கு மதிப்பெண் சான்று வழங்கப்படும் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு அலுவலக பதிவுப் பணி நடைபெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதன்கிழமை முதல் (அக்.14) 28ஆம் தேதி வரை வேலைவாய்ப்பு பதிவுப் பணி நடைபெறும்.

எனவே, பன்னிரண்டாம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவா்-மாணவியா் தங்களது 10ஆம் வகுப்பு கல்வித் தகுதியைப் பதிவுசெய்த வேலைவாய்ப்பு அலுவலக அட்டை எண், ஆதாா் அட்டை எண், குடும்ப அட்டை எண், செல்லிடப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை மதிப்பெண் சான்று வழங்கப்படும் நாளன்று எடுத்துவரவேண்டும். பத்தாம் வகுப்பு கல்வித் தகுதியைப் பதிவு செய்தோா் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு எண் தெரியாதபட்சத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகி பெற்றுக்கொள்ள வேண்டும்.

இம்மாதம் 28ஆம் தேதி வரையிலான 15 நாள்களுக்கும் மதிப்பெண் சான்று வழங்கத் தொடங்கிய முதல் நாளே பதிவுமூப்பு தேதியாக வழங்கப்படும். மாணவ-மாணவியா் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com