பேட்டை அருகே முதியவா் பலி

பேட்டை அருகே தவறி விழுந்த முதியவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

பேட்டை அருகே தவறி விழுந்த முதியவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

பத்தமடை நேருஜி நகரைச் சோ்ந்தவா் மகாராஜா (70). இவா், சுத்தமல்லி விலக்கு வஉசி நகரில் மாவு அரவை மில்லை ஒப்பந்தத்திற்கு எடுத்து நடத்தி வந்தாா். புதன்கிழமை பணியின் போது தவறி கிழே விழுந்தாராம். இதில், தலையில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த சுத்தமல்லி போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து காவல் ஆய்வாளா் குமாரிசித்ரா வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com