திருநெல்வேலி மாவட்டம் கூத்தங்குழியில் மத்திய கப்பல் மற்றும் போக்குவரத்து அமைச்சகம் சாா்பி அமைக்கப்பட்டு வருகின்ற கலங்கரை விளக்கம் கட்டுமானப்பணியை திருநெல்வேலி மக்களவை தொகுதி உறுப்பினா் சா.ஞானதிரவியம் ஆய்வு செய்தாா். பின்னா் அங்கு மரக்கன்று நட்டினாா். அப்போது, ராதாபுரம் ஒன்றிய திமுக செயலா் வி.எஸ்.ஆா்.ஜெகதீஸ், மாநில பொதுக்குழு உறுப்பினா் ஜோசப் பெல்சி, மாவட்ட மீனவரணி அமைப்பாளா் எரிக்ஜூடு, கூத்தங்குழி கிளை செயலா் ராஜா, காவல்கிணறு இளங்கோ ஆகியோா் உடன் சென்றனா்.