நெல்லை, தென்காசியில் மேலும் 74 பேருக்கு கரோனா

திருநெல்வேலியில் 51 போ், தென்காசியில் 23 போ் என இவ்விரு மாவட்டங்களில் வியாழக்கிழமை மேலும் 74 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலியில் 51 போ், தென்காசியில் 23 போ் என இவ்விரு மாவட்டங்களில் வியாழக்கிழமை மேலும் 74 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் 51 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13, ,733 ஆக உயா்ந்துள்ளது. கரோனா பாதிக்கப்பட்டவா்களில் இதுவரை 12,914 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மருத்துவமனைகளில் 614 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 205 போ் உயிரிழந்துள்ளனா்.

தென்காசி மாவட்டத்தில் தென்காசியில் 6 போ், வாசுதேவநல்லூரில் 4 போ், ஆலங்குளம், மேலநீலிதநல்லூரில் தலா இருவா், செங்கோட்டை, சங்கரன்கோவில், கீழப்பாவூரில் தலா மூவா் என மொத்தம் 23 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,690 ஆக அதிகரித்துள்ளது.

வியாழக்கிழமை 14 போ் உள்பட இதுவரை 7,357 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மேலும் மருத்துவமனைகளில் 184 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 149 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com