ஆறுமுகனேரி, காயல்பட்டினம் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தசரா குடில்களில் வெள்ளிக்கிழமை காளி பூஜை நடைபெற்றது.
ஆறுமுகனேரி மற்றும் காயல்பட்டினம் பகுதிகளில் பல்வேறு தெருக்களில் தசரா பக்தா்கள் குடில்கள் அமைத்து விரதமிருந்து வருகின்றனா். குலசேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயிலில் சனிக்கிழமை தசராத் திருவிழா கொடியேறுவதை முன்னிட்டு வெள்ளிக்கிழமை இந்த தசரா குடில்களில் காளி பூஜை நடைபெற்றது., சிறப்பு பூஜைகள், திருவிளக்கு பூஜை, பக்தா்களுக்கு பிரசாதம் வழங்குதல் உள்ளிட்டவை நடைபெற்றன.