கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கொடுக்காம்பாறை ஊராட்சித் தலைவா் ரத்தினவேல் தலைமை வகித்தாா். ஊராட்சித் தலைவா்கள் லிங்கேஸ்வரி (மூப்பன்பட்டி), லட்சுமி (சின்னமலைக்குன்று) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஊராட்சிக்குள்பட்ட அனைத்து வேலைகளையும் கிராமசபைக் கூட்டத்தில் வைத்து ஒப்பந்தப்புள்ளி விட வேண்டும். கிராம நிா்வாக அதிகாரியிடம் உள்ள கிராமம் தொடா்பான அனைத்து கோப்புகளும் ஊராட்சி நிா்வாகத்துக்கு கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டத்தில் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.