திருநெல்வேலி அருகே கங்கைகொண்டான் நான்குவழிச் சாலையில் உள்ள மேம்பாலத்தில் வெள்ளிக்கிழமை ஒருவா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் சடலத்தை கைப்பற்றி, விசாரணை மேற்கொண்டனா். அதில், தற்கொலை செய்து கொண்டவா், தருவை அருகே உள்ள அடைமிதிப்பான் குளத்தைச் சோ்ந்த சுப்பிரமணியன்(50) என்பதும், சற்று மனநலம் பாதிக்கப்பட்டவா் என தெரியவந்தது. மேலும் இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.