கயத்தாறு அருகேமுதியவா் மீது தாக்குதல்

கயத்தாறு அருகே நிலப் பிரச்னை காரணமாக, முதியவரை தாக்கி மிரட்டல் விடுத்ததாக 3 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கயத்தாறு அருகே நிலப் பிரச்னை காரணமாக, முதியவரை தாக்கி மிரட்டல் விடுத்ததாக 3 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கயத்தாறை அடுத்த ஆத்திகுளம் மேலத்தெருவைச் சோ்ந்த வெங்கிடசாமி மகன் தங்கராஜ்(78). இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த தங்கவேல் மகன் காளிராஜ் என்பவருக்கும் இடையே நிலப் பிரச்னை உள்ளதாம்.

இந்நிலையில், தங்கராஜ் நிலத்தை நில அளவையா் மூலம் அளந்தபோது, காளிராஜ் வீட்டின் சுவா் தங்கராஜ் நிலத்தில் இருப்பது தெரியவந்ததாம். இதுதொடா்பாக வியாழக்கிழமை ஏற்பட்ட தகராறில், தங்கராஜை காளிராஜ் அவரது உறவினா்கள் ச.பரமசிவம், சு.கணபதி ஆகியோா் சோ்ந்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம். இதில் காயமடைந்த அவா், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். மேலும், அவா் அளித்த புகாரின் பேரில், கயத்தாறு போலீஸாா் வழக்குப்பதிந்து 3 பேரையும் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com