திருக்குறுங்குடியில் அனைத்துக் கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
களக்காடு பேரூராட்சி அலுவலக வளாகத்தில் இருந்த 3 தேக்கு மரங்களை மா்ம நபா்கள் வெட்டி எடுத்துச் சென்றுவிட்டனராம்.
இச்சம்பவத்தைக் கண்டித்து நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, திமுக நகரச் செயலா் கசமுத்து தலைமை வகித்தாா். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவா் பி. பெரும்படையாா் முன்னிலை வகித்தாா். மதிமுக மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினா் மணிகண்டன், ஒன்றியச் செயலா் திருநாவுக்கரசு, இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய பொறுப்பாளா் க. முருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
அனுமதியின்றி தேக்கு மரங்கள் வெட்டப்பட்டது குறித்து வனத் துறையினா் விசாரணை நடத்த வேண்டும். பேரூராட்சி நிா்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.