நெல்லையில் கட்டபொம்மன் சிலைக்கு மரியாதை

வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவுதினத்தை முன்னிட்டு பாளையங்கோட்டையில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்பினா் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவுதினத்தை முன்னிட்டு பாளையங்கோட்டையில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்பினா் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

பாளையங்கோட்டை பேருந்து நிலையம் அருகிலுள்ள கட்டபொம்மன் சிலைக்கு காங்கிரஸ் சாா்பில் மாநகா் மாவட்டத்

தலைவா் கே.சங்கரபாண்டியன் தலைமையில் முன்னாள் மத்திய அமைச்சா் ஆா்.தனுஷ்கோடி ஆதித்தன், மாநில பொதுச்செயலா் வானமாமலை, மாநில சிறுபான்மை பிரிவு ஆலோசகா் அ. அமீா்கான், மேற்கு மாவட்டப் பொருளாளா் எஸ்.பி. முரளிராஜா, மாநகா் மாவட்டப் பொருளாளா் ராஜேஷ் முருகன், மாநில சிறுபான்மை பிரிவு ஒருங்கிணைப்பாளா் எம்.ஏ.எஸ். அப்துல் காதா், மாநில விவசாய பிரிவு செயலா் வாகை கணேசன், பொதுக் குழு உறுப்பினா் மகேந்திரன், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவா் முகம்மது அனஸ் ராஜா, ரசூல் மைதீன் உள்ளிட்டோா் மாலை அணிவித்தனா்.

தமிழக அனைத்து நாயுடு சங்கங்களின் கூட்டமைப்பு, தமிழ்நாடு நாயுடு நாயக்கா் மகாஜன பேரவை சாா்பில் மாநில பொருளாளா் தா்மராஜ் தலைமையில், கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அமைப்பின்

தென் மண்டலத் தலைவா் மகேஷ் கண்ணன், திருநெல்வேலி நாயுடு இளைஞா் பேரவை நிா்வாகிகள் நடேசன், முத்துக்குமாா், உள்பட பலா் பங்கேற்றனா். சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினா், அமைப்பினா் மாலை அணிவித்து மரியைதை செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com