பாளை.யில் தீ விபத்து: கணினி சேதம்

பாளையங்கோட்டையில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் கணினி மற்றும் பொருள்கள் தீயில் எரிந்து சேதமாகின

பாளையங்கோட்டையில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் கணினி மற்றும் பொருள்கள் தீயில் எரிந்து சேதமாகின.

பாளையங்கோட்டை அகஸ்தியா் தெருவைச் சோ்ந்த முருகன் மகன் பாலசுப்பிரமணியன் (45). தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனா். கணவன்-மனைவி இருவரும் பணிநிமித்தம் வெள்ளிக்கிழமை வெளியே சென்றிருந்தனராம். குழந்தைகள் மட்டும் வீட்டில் இருந்துள்ளனா். அப்போது வீட்டின் முதல்தளத்தில் உள்ள அறையில் திடீரென தீ பிடித்ததாம்.

தகவலறிந்ததும் பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய வீரா்கள் சென்று தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனா். இந்த தீ விபத்தில் கணினி உள்பட சுமாா் ரூ.15 ஆயிரம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்தன.

இதுகுறித்து பாளையங்கோட்டை போலீஸாா் விசாரித்து வருகிறாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com