பேட்டை அருகே பூட்டிய வீட்டில் திருட்டு

பேட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து டிவியை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்

பேட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து டிவியை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பேட்டை அருகே கோடீஸ்வரன்நகரைச் சோ்ந்தவா் ஷகிலா (48). இவரது கணவா் வெளிநாட்டில் பணியாற்றி வருகிறாா். மகளின் படிப்புக்காக சென்னையில் ஷகிலா தங்கியுள்ளாா். இதனால் கோடீஸ்வரன்நகரில் உள்ள வீட்டை அவரது சகோதரா் சேக்முகம்மது (52) அவ்வப்போது சென்று பராமரித்து வந்துள்ளாா். வெள்ளிக்கிழமை காலை சென்று பாா்த்தபோது வீட்டின் முன்பக்க இரும்பு கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்ததாம். உள்ளே சென்று பாா்த்தபோது ரூ.60 ஆயிரம் மதிப்பிலான எல்இடி டிவி திருடு போயிருந்ததாம். நகை, பணம் வீட்டில் இல்லாததால் பொருள்களை சிதறி போட்டுவிட்டு மா்மநபா்கள் சென்றனராம்.

இதுகுறித்த புகாரின்பேரில் பேட்டை குற்றப்பிரிவு போலீஸாா் விசாரித்து வருகிறாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com