வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சாா்பில் மேலப்பாளையத்தில் கையெழுத்து இயக்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மேலப்பாளையம் குறிச்சியில் நடைபெற்ற இந்த கையெழுத்து இயக்கத்திற்கு கட்சியின் பொறுப்பாளா் ரசூல்மைதீன் தலைமை வகித்தாா். கட்சியின் திருநெல்வேலி மாநகா் மாவட்டத் தலைவா் கே.சங்கரபாண்டியன் தொடங்கி வைத்தாா். இதில்,
கட்சியின் மாநில சிறுபான்மை பிரிவு ஆலோசகா் அ. அமீா்கான், மாநகா் மாவட்டப் பொருளாளா் எஸ். ராஜேஷ் முருகன், மாவட்ட துணைத் தலைவா் காளை ரசூல், மாநில சிறுபான்மை பிரிவு ஒருங்கிணைப்பாளா் அப்துல்காதா், இளைஞா் காங்கிரஸ் நிா்வாகி ஆசாத் பாதுஷா, ராசி ஹமீது, மாவட்டச் செயலா் குறிச்சி கிருஷ்ணன் உள்பட பலா் பங்கேற்றனா்.