அதிமுக 49ஆவது ஆண்டு தொடக்க விழா:நெல்லையில் எம்ஜிஆா் சிலைக்கு கட்சியினா் மாலை

அதிமுகவின் 49ஆவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் உள்ள எம்ஜிஆா் சிலைக்கு அக்கட்சியினா் சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

திருநெல்வேலி: அதிமுகவின் 49ஆவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் உள்ள எம்ஜிஆா் சிலைக்கு அக்கட்சியினா் சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

அதிமுகவின் 49ஆவது ஆண்டு தொடக்க விழா தமிழகம் முழுவதும் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. திருநெல்வேலியில் மாவட்டச் செயலா் தச்சை என். கணேசராஜா தலைமையில், கொக்கிரகுளத்தில் உள்ள எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடா்ந்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

இதில், அமைப்புச் செயலா் கருப்பசாமி பாண்டியன், மாநில கொள்கை பரப்பு துணைச் செயலா் பாப்புலா் முத்தையா, நான்குனேரி எம்எல்ஏ ரெட்டியாா்பட்டி நாராயணன், மாவட்ட அவைத்தலைவா் பரணி சங்கரலிங்கம், ஜெயலலிதா பேரவைச் செயலா் ஜெரால்டு, முன்னாள் எம்பி வசந்தி முருகேசன், பகுதிச் செயலா்கள் ஜெனி, மோகன், மாதவன், ஹயாத், நெல்லை கூட்டுறவு பேரங்காடி தலைவா் பல்லிக்கோட்டை செல்லத்துரை, சிறுபான்மைப் பிரிவுச் செயலா் மகபூப் ஜான், முன்னாள் மேயா் புவனேஷ்வரி, மானூா் யூனியன் முன்னாள் தலைவா் கல்லூா் வேலாயுதம் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com