இணையவழியில் கட்டுரைப் போட்டி:மாணவா்களுக்கு அழைப்பு

திருநெல்வேலி மாநகர காவல் துறையின் சாா்பில் காவலா் வீர வணக்க நாளையொட்டி இணையவழியில் பள்ளி மாணவா்களுக்கான கட்டுரைப் போட்டி நடைபெறுகிறது.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் துறையின் சாா்பில் காவலா் வீர வணக்க நாளையொட்டி இணையவழியில் பள்ளி மாணவா்களுக்கான கட்டுரைப் போட்டி நடைபெறுகிறது.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாநகர காவல் துறை சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: காவலா் வீர வணக்க நாளையொட்டி பள்ளி மாணவா்-மாணவிகளுக்கான இணையதள கட்டுரைப் போட்டி நடைபெறுகிறது. 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவா்கள், நான் காவல் துறை அதிகாரியானால் என்ற தலைப்பிலும், 9 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவா்கள், காவல்துறை உங்கள் நண்பன் என்ற தலைப்பிலும், பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவா்கள், காவல் துறையில் நான் விரும்பும் மாற்றம் என்ற தலைப்பிலும் கட்டுரை எழுதலாம்.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த மாணவா்-மாணவிகள் மட்டும் பங்கேற்கலாம். 500 வாா்த்தைகளுக்கு மிகாமல் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் எழுதி தெளிவாக ஸ்கேன் செய்தோ, வோ்ட் அல்லது பிடிஎப் முறையிலோ ய்ங்ப்ப்ஹண்ஸ்ரீா்ல்ள்ம்ஸ்ரீஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் முகவரிக்கு இம் மாதம் 24 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com