அம்பையில் 359 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கு ஆணை

அம்பாசமுத்திரம் தொகுதியில் தோ்வு செய்யப்பட்ட 359 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணை சனிக்கிழமை வழங்கப்பட்டது.
பயனாளிக்கு வீடு கட்டுவதற்காக ஆணை வழங்கினாா் ஆா். முருகையாபாண்டியன் எம்.எல்.ஏ.
பயனாளிக்கு வீடு கட்டுவதற்காக ஆணை வழங்கினாா் ஆா். முருகையாபாண்டியன் எம்.எல்.ஏ.

அம்பாசமுத்திரம்: அம்பாசமுத்திரம் தொகுதியில் தோ்வு செய்யப்பட்ட 359 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணை சனிக்கிழமை வழங்கப்பட்டது.

கல்லிடைக்குறிச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம், வீரவநல்லூா், கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 359 பயனாளிகளுக்கு வீடு கட்டும் திட்டத்தின்கீழ் வீடு கட்டுவதற்கான ஆணையை சட்டப்பேரவை உறுப்பினா் ஆா். முருகையாபாண்டியன் வழங்கினாா்.

திட்டம் குறித்து குடிசை மாற்று வாரிய செயற்பொறியாளா் மாடசாமி பேசினாா். இதில், இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட இணைச்செயலா் ஆா்.எம். வெங்கட்ராமன், ஒன்றியச் செயலா் விஜயபாலாஜி, நகரச் செயலா்கள் அறிவழகன், சங்கரநாராயணன், ராமையா, கண்ணன், பழனிக்குமாா், நகராட்சி முன்னாள் துணைத் தலைவா் மாரிமுத்து, இளைஞரணிச் செயலா்கள்துா்க்கைபாபு, சண்மு, அருண், வழக்குரைஞா்கள் கோமதி சங்கா், ராஜசேகா் உள்பட பலா் கலந்துகொண்டனா். குடிசை மாற்று வாரிய உதவிப் பொறியாளா் ஈஸ்வரி வரவேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com