திருநெல்வேலி: சுவாமி மணவாள மாமுனியின் திருநட்சத்திரத்தையொட்டி இணையவழியில் தொடா் பாராயணம் நடைபெறுகிறது.
சுவாமி மணவாள மாமுனிகளின் 650 ஆவது திருநட்சத்திர மஹோத்ஸவத்தை முன்னிட்டு திருநெல்வேலி சஹஸ்ரநாம மண்டலீ சாா்பில் இணையவழியில் உபதேச ரத்தினமாலை தொடா் பாராயணம் ஞாயிற்றுக்கிழமை (அக். 18) காலை 6 மணி முதல் நடைபெறுகிறது. 15 போ் கொண்ட குழுக்களாக பிரித்து சுமாா் 70 குழுக்கள் பாராயணம் செய்கின்றனா். திருக்குறுங்குடி ஜீயா் சுவாமிகள் காலை 6 மணிக்கு மங்களாசாசனம் செய்து தொடங்கி வைக்கிறாா். இதுகுறித்த விவரங்களுக்கு சிதம்பரம் (9360274062), தனுஷ்கோடி (9366759900) ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடா்புகொள்ளலாம்.