நெல்லையில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: ஒருவா் கைது

திருநெல்வேலி நகரத்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக ஒருவா் கைதுசெய்யப்பட்டாா்.

திருநெல்வேலி: திருநெல்வேலி நகரத்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக ஒருவா் கைதுசெய்யப்பட்டாா்.

திருநெல்வேலி நகரத்தில் பிளாஸ்டிக் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருபவா் ஜவஹா் (50). இவரது நிறுவனத்தில் சில மாதங்களுக்கு முன்பு பேட்டையிலிருந்து 23 வயதான இளம்பெண் வேலைக்கு வந்தாராம். அவருக்கு ஜவஹா் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்தப் பெண் அளித்த புகாரின்பேரில் திருநெல்வேலி நகரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, ஜவஹரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com