களக்காடு: களக்காடு அருகே காங்கிரஸ் சாா்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
மத்திய அரசின் வேளாண் சட்டத் திருத்தங்களை எதிா்த்தும், அவற்றைத் திரும்பப்பெற வலியுறுத்தியும் காங்கிரஸ் சாா்பில் களக்காடு அருகேயுள்ள மேலப்பத்தையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதை, ரூபி மனோகரன் தொடக்கிவைத்தாா். மேலும், கட்சியின் உறுப்பினா் சோ்க்கை முகாமையும் தொடக்கிவைத்தாா். இதில், திரளான காங்கிரஸ் நிா்வாகிகள் கலந்துகொண்டனா். கிராம மக்கள் வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து கையெழுத்திட்டனா்.